Wednesday, 6 September 2017

உளுந்தங் கஞ்சி / Uluntha Kanji..

உளுந்தங் கஞ்சி / Uluntha Kanji..

*தேவையான பொருள்கள் -*
*தோல் உளுந்து - 1/2 கப்*
*பச்சரிசி - 1/4 கப்*
*தேங்காய் துருவல் - 1/2 கப்*
*கருப்பட்டி - 1/4 கப்*
*பூண்டு பற்கள் - 4*
*வெந்தயம் - 1* *தேக்கரண்டி*
*உப்பு - 1/4 தேக்கரண்டி*

*செய்முறை -*

*தேங்காய் துருவலுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து தேங்காய் பால் எடுத்து வைக்கவும். ஒரு வாயகன்ற* *பாத்திரத்தில் கால் கப் தண்ணீருடன் கருப்பட்டியை சேர்த்து கொதிக்க விடவும்.* *கருப்பட்டி கரைந்ததும் வடி கட்டி வைக்கவும்.*
*குக்கரில் உளுந்தம்பருப்பு , பச்சரிசி இரண்டையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கழுவி அதனுடன் 5 கப் தண்ணீர், உப்பு,மற்றும் வெந்தயம், பூண்டு சேர்த்து மூடி அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும்.*
 
*நீராவி வந்ததும் வெயிட் போட்டு 5 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.*
*நீராவி அடங்கியதும் மூடியை எடுத்து ஒரு மத்து அல்லது கரண்டி கொண்டு நன்றாக மசிக்கவும்.*
*பிறகு அதனுடன் கரைத்து வைத்துள்ள கருப்பட்டி தண்ணீர், தேங்காய் பால் இரண்டையும் சேர்த்து நன்றாக கலக்கி விடவும்.*
*கெட்டியாக இருந்தால் ஒரு கப் வெந்நீர் சேர்த்துக்  கொள்ளவும். சுவையான உளுந்தங் கஞ்சி ரெடி.*

No comments:

Post a Comment