பனீர் குருமா / Paneer kuruma..
*தேவையான பொருள்கள் -*
*பனீர் - 200 கிராம்*
*தக்காளி - 1*
*இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி*
*மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி*
*மல்லித் தூள் - 1 மேஜைக்கரண்டி*
*சீரகத்தூள் - 1 தேக்கரண்டி*
*மஞ்சள் தூள் - 1/2* *தேக்கரண்டி*
*கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி*
*உப்பு - தேவையான அளவு*
*மல்லித் தழை - சிறிது*
*அரைக்க -*
*தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி*
*முந்திரிப்பருப்பு - 5*
*தாளிக்க -*
*எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி*
*பட்டை - சிறிய துண்டு*
*கிராம்பு - 2*
*பெரிய வெங்காயம் - 1*
*செய்முறை -*
*பனீர், வெங்காயம், தக்காளி, மல்லித்தழை எல்லாவற்றையும் வெட்டி வைக்கவும். பனீர் துண்டுகளை 10 நிமிடம் வெந்நீரில் போட்டு வைக்கவும். 10 நிமிடங்களில் பனீர்* *மிருதுவாகி விடும்.*
*தேங்காய் துருவல், முந்திரிப்பருப்பு இரண்டையும் மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.*
*அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போடவும், பட்டை பொன்னிறமானதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.*
*வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பச்சை வாடை போனதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.*
*தக்காளி நன்கு வதங்கியதும் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள். மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து ஒரு நிமிடம் கிளறி* *அதனுடன் ஒரு கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கொதிக்க விடவும்.*
*மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து கொதிக்க விடவும்.*
*பிறகு பனீர் துண்டுகளை சேர்த்து 3 நிமிடம் வரை கொதிக்க விட்டு மல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும். சுவையான பனீர் குருமா ரெடி.*
No comments:
Post a Comment