Wednesday, 6 September 2017

வடை கறி ....


*வடை கறி . ...*

*தேவையான பொருட்கள்:*

*கடலைப்பருப்பு - 1 கப் (நீரில் 1 மணிநேரம் ஊற வைத்தது)*
*சோம்பு - 1 டீஸ்பூன்*
*வரமிளகாய - 2*
*உப்பு - தேவையான அளவு*

*கிரேவிக்கு...*
*வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)*
*தக்காளி - 2*
*இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்*
*மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்*
*மல்லி தூள் - 1 டீஸ்பூன்*
*மஞ்சள் தூள் - 1 சிட்டிகை*
*கொத்தமல்லி - சிறிது*
*தாளிப்பதற்கு...*
*எண்ணெய் - 1 டேபிள்* ஸ்பூன்
*பட்டை - 1*
*கிராம்பு - 2*
*பிரியாணி இலை - 1*
*பச்சை மிளகாய் - 1*
*கறிவேப்பிலை - சிறிது*

*செய்முறை:*

*முதலில் தக்காளியை நீரில் போட்டு சிறிது நேரம் அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும். பின் அதன் தோலை நீக்கிவிட்டு, அதனை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.*

*பின்னர் ஊற வைத்த கடலைப்பருப்பை நன்கு கழுவி, அதனை மிக்ஸியில் போட்டு, அத்துடன் வரமிளகாய், சோம்பு மற்றும் உப்பு சேர்த்து சேர்த்து, கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.*

*பிறகு அதனை சிறுசிறு வடைகளாக தட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.*

*பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.*

*பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, அடுத்து வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள தக்காளியை ஊற்றி, மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, 3/4 கப் தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட வேண்டும்.*

*பிறகு அதில் வடைகளை போட்டு, மிதமான தீயில் 5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான வடைகறி ரெடி!!!*

No comments:

Post a Comment