Thursday, 7 September 2017

ஆன்மாவானது ஏழு திரைகளுக்கு அப்பால் உள்ளதாக வள்ளலார் கூறுகிறார்.

ஆன்மாவானது ஏழு திரைகளுக்கு அப்பால் உள்ளதாக  வள்ளலார்  கூறுகிறார்.

அதாவது ஏழு திரைகள் ஆன்மாவை மறைத்து கொண்டுள்ளது.

இந்த ஏழு திரைகளை கடக்கும் பொழுது அவன் ஆன்மாவைக்கானலாம் 

அதன் மூலம் ஏழாம் அறிவை பெறலாம்.

முதலில்  கறுப்புத்திரை - இதை நீங்கள் தூங்கும் பொழுது காணும் திரை என்று சொல்லாம்

அல்லது தியானத்தின்  தொடக்கத்தில் காணும் திரை இதுதான்.

இது மாய சக்தியால் ஆனது என்று சொல்லப்படுகிறது.

இவ்வுலகம் மாயையால் ஆனது மாயை உங்களை ஆட்கொண்டிருக்கும் வரை இந்த திரை மட்டுமே உங்களுக்கு தெரியும்.

இதையும் தாண்டி நீலத்திரை கிரியா சக்தியையும்,

பச்சைத்திரை பராச்கதியையும்,

சிவப்புத்திரை இச்சா சக்தியையும்,

பொன்மைத்திரை ஞான சக்தியையும்,

வெண்மைத்திரை ஆதி சக்தியையும்,

கலப்புத்திரை சித் சக்தியையும்

குறிப்பாதாக வள்ளலார் கூறுகிறார்.

இந்த ஏழு திரைகளையும் நம்முள் காண முடியும்.

இந்த ஏழு திரைகளையும் தாண்டினால் இறைவனை காணலாம்.

ஒருவரின் தியானத்தை பொருத்தும்,

ஒருவர்  பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணியத்தை (அல்லது தியானத்தை) பொருத்தும்

ஒருவர் இத்திரைகளை வெகு சுலபாமாகவோ அல்லது பல காலங்கள் கடந்தோ கடக்க நேரிடும்.

இத்திரைகளை கடந்து ஆன்மா அல்லது இறைவனை (ரெண்டும் ஒன்றா? :) ) கண்ட பிறகு கிடைக்கும் அறிவே  ஏழாம் அறிவாகும்.

நமது சித்தர் தாத்தாக்கள் இந்த ஒளி பொருந்திய பாதையில் தான் பயணம் செய்தார்கள் என தெரிய வருகிறது. 

தன்னை இறைவன் என்று கூறுபவர்களும்,

இறைத்தூதன் என்று கூறுபவர்களும் இவ்வழியிலே சென்றதாக தெரிகிறது

No comments:

Post a Comment