நெய் தீபம் எனும் பெயரில் பொய் தீபம் – ஆலயங்களில் நடக்கும் நெய் தீப ஊழல்...
- ஆலயங்களில், அறநிலையத்துறையின் அனுமதியோடு, ஏலம் மூலம் நிபந்தனையின் பேரில், வியாபார நோக்கத்தில் விற்கப்படும், போலியான நெய் விளக்குகள், அதன் வியாபார நுணுக்கங்கள் பற்றிய ஒரு பதிவு இது …
- இன்று ஆலயங்களில் விற்கப்படும் நெய் விளக்கு தயாராகும் முறை பற்றி பார்ப்போம்:
- அந்த விளக்குகளில் நிரப்பப்படும் “நெய்” போன்ற நிறம், தோற்றம் கொண்ட திடமான “பசை”யானது, சைவ மற்றும் அசைவ உணவகங்களில் உபயோகப்படுத்தப்பட்ட, எண்ணைகளை இலவசமாகவோ, மிகக் குறைந்த விலையிலோ வாங்கி, அதை வடிகட்டி, மீண்டும் மீண்டும் கொதிக்க வைத்து, அதில் மரவள்ளிக்கிழங்கு மாவு, டால்டா, மெழுகு மற்றும் பசைமாவு, மஞ்சள் நிறத்திற்காக வண்ணப் பொடியினை கலந்து விளக்குகளில் அடைத்து,”நெய் விளக்கு” என்று, பொய் சொல்லி, பொய்யான மாட்டுக் கொழுப்பு “பசை விளக்கினை” பொது மக்களின் பணத்தினை குறி வைத்து விற்பனை செய்து, கோடிக்கணக்கில் கொள்ளை லாபம் அடிக்கின்றார்கள்.
- முதலில் இந்த கடைகளில் உள்ள நெய் விளக்குகளை ஒரு நாளாவது முகர்ந்து பார்த்து இருக்கிறீர்களா?. கருமம்.
- ஒரு நெய் விளக்கு” 3 ரூபாயில்” ஏற்ற முடியுமா?.
- இன்றைய நாளில், ஒரு கிலோ ஆவின் “தூய பசு நெய்யின்” விலை 1 கிலோ, 450 முதல் 550 ரூபாய் வரை. ஒரு கிலோ பசு நெய்யில், அதிகபக்ஷமாக 75 விளக்குகளை ஏற்றுவதாக வைத்துக் கொண்டாலும் ,விளக்கு மற்றும் திரி உள்பட குறைந்தது 6.50 ரூபாய் செலவாகும். ஆனால் 10 ரூபாய்க்கு 3 நெய் விளக்கு எப்படி ஆலயங்களில் இவர்களால் விற்கப்படுகிறது?.
- உண்மையான பசு நெய் கொண்டு, ஏற்றப்படும் விளக்கின் ஒளி,ஒரே சீராக வெள்ளை ஒளியாக, நறுமணத்தோடு இருக்கும். அந்த ஒளி வெள்ளத்தில், அந்த இடத்தில் உள்ள காற்று தூய்மையாகி, பிராண வாயு சுத்தமாக கிடைக்கும்.
- ஆனால் இந்த மாதிரி,தரமற்ற “பசை விளக்குகள்” சரி வர எறிவதும் இல்லை, அதோடு ஒரு வித நாற்றமும் அடிக்கிறது, வருடம் முழுவதும் கொளுத்தும் 100 டிகிரி வெய்யிலில், நமது உடம்பே உருகி விடும்போல் இருக்கின்ற நிலையில், இந்த “பசை விளக்குகள்” அக்னி வெய்யிலில் கூட உருகாமல், கல்லு மாதிரி இருப்பதை கவனியுங்கள்.
- முன்பு எல்லாம் மக்கள் தங்களின் வீடுகளில், நாட்டு பசுவினை வளர்த்து, அதன் பாலில் இருந்து, தயிர், வெண்ணை, நெய் முதலானவற்றை ஆலயங்களில் உள்ள இறைவனுக்கு உபயோகப் படுத்தினார்கள்.
- பின்னர் கால ஓட்டத்தின் காரணமாக, கடைகளில் இருந்து “வெண்ணை” வாங்கி காய்ச்சி, உருக்கி ,அதில் இருந்து நெய்யை உபயோகப்படுத்தினார்கள், பின்னர் கடைகளில் “பசு நெய்” வாங்கி விளக்கு ஏற்றினார்கள்.. நாள்பட, பசு நெய் என்பது மறைந்து, பல வண்ண டப்பாக்களில், பல வித பெயர்களில் கடைகளில் விற்கப்படுகின்ற "நெய்யினை"க்கொண்டு விளக்கேற்றினார்கள். ஆனால் தற்பொழுது ,நெய் வாங்கி விளக்கு ஏற்றுவதை மறந்து, சோம்பலின் காரணமாகவும், வசதியின் பொருட்டும், தற்பொழுது ஆலயங்களில், “நெய் தீபம்” என்ற பெயரில் விற்கப்படும், “பசை விளக்குகளை ” விஷயம் தெரியாமல் வாங்கி, பயபக்தியுடன் இறைவனுக்கு விளக்கேற்றி வழிபடுகின்றனர். இது முற்றிலும் தவறு.
- எந்த கோயிலுக்கு சென்றாலும் புஷ்பம் மட்டும் போதும். அதுதான் சிறந்தது, மிகவும் பலனளிக்க கூடியது .விளக்கேற்றுவது வீட்டில் செய்ய வேண்டிய இறைப்பணி. கோவில்கள், இறைவனைத் தரிசித்து, பிரார்த்தனை செய்து, நிதானமாக தெய்வ சிந்தனையுடனோ அல்லது தெரிந்த ஸ்லோகங்களைச் சொல்லியபடியோ அல்லது பகவான் நாமங்களைச் சொல்லியபடியோ பிரதக்ஷணம் வந்து நமஸ்கரிக்க வேண்டிய இடங்கள். நெய் விளக்குகளையும் எண்ணை விளக்குகளையும் ஏற்றி, கோவில் சுவர்களையும், தரையையும், தூண்களையும், சிற்பங்களையும் அசுத்தப்படுத்துவதினால் பாவம் தான் வந்து சேரும்.
- அதுமட்டுமல்லாமல், கோயிலின் வாசலிலும் உள்ளேயும், வெளியேயும் கடைவிரித்து ஏமாற்றுகின்ற போலி வியாபாரிகளின், கொள்ளையடிக்கும் நோக்கத்திற்கு, பலியாகி, அவன் விற்கும் “பசை விளக்கினை” நெய் விளக்கு என்ற பெயரில், விலை கொடுத்து வாங்கி, கோயிலில் ஏற்றிவிட்டு, விளக்கு ஏற்றும்போது கைகளில் பட்டுவிட்ட, நாற்றம் பிடித்த “பசையினை” கோயில் தூண்களில் தடவி கோயிலையும் நாறடித்துவிட்டுப்போவதால் எந்த புண்யமும் இல்லை பாவம்தான் நம்மை வந்து சேரும் என்பதை நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள்.
- நாம் கோயிலுக்கு செல்வதே பாவங்களை போக்கத்தான். அப்படி இருக்க இந்தமாதிரி போலியான சாஸ்திர விரோதமான விளக்குகளை வாங்கி, மேலும் மேலும் பாவச்செயல்களை செய்ய வேண்டாம்.
- அவன் ஏமாற்றினால் அவனுக்கு ஆண்டவன் தண்டனை கொடுப்பான் என்று, தவறு செய்பவனின் செயலுக்கு நியாயம் கற்பிக்கும் சிலரும் இருக்கக்கூடும்.அவர்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும் .நம்முடைய இயலாமை, சோம்பேறித்தனம், மற்றும் பணத்தினைக்கொண்டு அனைத்தையும் வாங்கிக் கொள்ளலாம் என்ற தவறான சிந்தனை ஒன்றே இன்று ஆலயங்களில் கூட ,அநியாயங்கள் அளவின்றி நடைபெறக் காரணமாக இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்
- உண்மையான பக்தியே இறைவனை அடையும் வழி. பரிஹாரம் என்ற பெயரில் பாவம் செய்ய வேண்டுமா?
- மேற்கூறிய அனைத்து விவரங்களும் விளக்கேற்றுதலுக்கும் பொருந்தும்..
- ஆண்டவனை உளமாற உண்மையில் நேசித்தால் சுத்தமான நாட்டுப் பசு நெய் விளக்கு கொண்டு போய் ஏற்றுங்கள்....வசதி இருந்து உங்களால் முடிந்தால். இல்லாவிட்டால்
- மனமே விளக்கு! பக்தியே தூய நெய்! நம்பிக்கையே அதன் தீபம்...
No comments:
Post a Comment