சூதகவலி,தடை,பெரும்பாடு/அதிகரித்த மாதவிலக்கு,கருப்பைக்கோளாறு
1. 4 செம்பரத்தைபூக்களை அரைத்து காலையில்சாப்பிட்டுவர மாதவிலக்கு சீராகும்
2. செம்பரத்தைபூச்சூரணம் 1தேகரண்டி தினமிருவேளை சாப்பிட்டுவர மாதவிலக்கு சீராகும்
3. தண்ணீர்விட்டான்கிழங்குச்சூரணம்2கிராம்,பசுநெய்யில் தினமிருவேளை சாப்பிட்டுவர பெரும்பாடு தீரும்
4. தொட்டாற்சுருங்கிச் சமூலச்சாறு4தேகரண்டி,தேன்2தேகரண்டி கலந்து தினம்3வேளை சாப்பிட்டுவர பெரும்பாடு தீரும்
5. தொட்டாற்சுருங்கி இலை கைப்பிடி,சிறிதுசீரகம்,வெங்காயம் சேர்த்தரைத்துஎலுமிச்சையளவு சாப்பிட பெரும்பாடு தீரும்
6. நாவல்பட்டையை சிதைத்து, 5ல்1ன்றாய்க் காய்ச்சி தினமிருவேளை பருகிவர பெரும்பாடுகட்டுப்படும்
7. 6 தேகரண்டி பிரண்டைச்சாற்றுடன், 1தேகரண்டி ந.எண்ணை கலந்து காலையில்சாப்பிட மாதவிலக்கு சீராகும்
8. வில்வ இலைகளை அரைத்துகொட்டைப்பாக்களவு சாப்பிட்டு குளிர்ந்த நீரில்குளித்துவர பெரும்பாடு குணமாகும்
9. வேப்பம்பட்டைக்கஷாயம் 200மிலி தினம்3வேளை பருகிவர மாதவிலக்கு சீராகும்
10. மலைவேம்பு வேர்பட்டைதூள் 2தேகரண்டி, 200மிலி வெந்நீரில் கலந்து பருக மாதவிடாய் சீராகும்.
11. சிறுகுறிஞ்சான்இலை1பங்கு, களாஇலை2பங்குசேர்த்து அரைத்து காலையில் சாப்பிடமாதவிலக்கு சீராகும்.கர்பாயாசக்கோளாறு நீங்கும்.
No comments:
Post a Comment