Wednesday, 6 September 2017

அடை...

*அடை*

*தேவையானவை:*

*புழுங்கலரிசி – 1 டம்ளர்*
*துவரம்பருப்பு – 1/4 டம்ளர்*
*கருத்த உளுத்தம்பருப்பு – ஒரு கைப்பிடி*
*வெந்தயம் – 1/4 டீஸ்பூன்*
*மிளகாய் வற்றல் – 4*
*கறிவேப்பிலை – ஒரு* *இணுக்கு*
*காயம் – சிறிதளவு*

*செய்முறை:*

*1. புழுங்கலரிசி,பருப்பு வகைகளைச் சுடுநீரில் ஊற வைக்கவும்.*

*2. இரண்டு மணி நேரம் ஊறிய பிறகு மின் அரைப்பானில் ஊற வைத்த புருப்பு, அரிசியுடன் வெந்தயம்,காயம்,மிளகாய் வற்றல், 4 கறிவேப்பிலை,உப்பு போன்றனவற்றைச் சேர்த்து கரகரப்பாக அரைத்து எடுக்கவும். கறிவேப்பிலையைக் கிள்ளிப் போடவும்.*

*3. தோசைக்கல்லில் அடையாக வார்த்து எடுக்கவும்.*

*4,அவியல்,தேங்கய் சட்னி அல்லது நிலக்கடலைச் சட்னி அருமையான இணை.* *வெல்லம் தொட்டுக் கொண்டாலும் அமிர்தம் தான்.*
*கூடுதல் குறிப்புகள்*

*1. மேற்கூறிய அடைக்கு அரிசி, பருப்பு ஒரு மணி நேரம் ஊறினால் கூடப் போதுமானது.*

*2. வெங்காயம் சேர்க்க விரும்புவர்கள் அடை ஊற்றும் போது வெங்காயத்தைத் தூவிக் கொள்ளலாம்.*

*3. புளிப்பு அடை வேண்டுபவர்கள் இந்த அடை மாவுடன் சிறிது மோர் கலந்து வார்த்து எடுக்கலாம்.*
*4. குழந்தைகளுக்குப் பிடித்த சத்துக்கள் நிறைந்த அருமையான சிற்றுண்டி வகையான இந்த அடையை விரைவிலும் செய்து முடிக்கலாம்.*

No comments:

Post a Comment