Saturday, 9 September 2017

திருப்பதி_லட்டுக்கு_வயசு_302 ஆம்..

#திருப்பதி_லட்டுக்கு_வயசு_302 ஆம்..

#திருமலை_திருப்பதி_லட்டு #உருவானது_எப்படி? - இனிப்பான அரிய தகவல்கள்

பிரசாதங்களில் பிரத்யேகச் சுவைகொண்டது; உலகம் முழுக்கப் பிரபலமானது; `இன்னொன்று கிடைக்காதா?’ என பக்தர்களை ஏங்கச் செய்வது... திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தயாராகும் லட்டு!

நாள் ஒன்றுக்கு சுமார் ஒன்றரை லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன. என்னதான் நெய்யின் அளவைக் கூட்டி, ஏலக்காயும் முந்திரியும் சேர்த்து, பல வாசனைப் பொருட்களைப் போட்டாலும், இது தரும் சுவை எப்பேர்ப்பட்ட கைதேர்ந்த சமையல் கலைஞருக்கும் கைகூடுவதில்லை. இது மந்திரஜாலமா... ஏழுமலையானின் மகிமையா? இப்படிக் கேட்டால் பக்தர்கள் அடித்துச் சொல்வார்கள்... அது ஏழுமலையானின் மகிமைதான் என்று! 

திருமலை திருப்பதி வேங்கடவனுக்கு 1715 ஆகத்து 2 முதல் லட்டை நைவேத்தியமாக படைப்பது துவங்கியது.என்றாலும் 1803 இல் இருந்துதான் பிரசாதங்களை பக்தர்களுக்கு விற்கும் முறை கோயிலில் தொடங்கியது. அப்போது இனிப்பு பிரசாதமாக பூந்தி விநியோகம் செய்யப்பட்டது. தொடர்ந்து 1940 முதல் பூந்திக்கு பதில் லட்டை பிரசாதமாக வழங்கத்துவங்கினர்.

திருமலைக் கோயிலின் சம்பங்கி பிரதாக்‌ஷணம் என்னும் இடத்தில் லட்டுகள் தயாரிக்கும் பொட்டு என்னும் மடப்பள்ளி உள்ளது. இங்கு பொருட்கள் சுமந்து செல்ல பயன்படுத்தப்படும் மூன்று கன்வேயர் பெல்ட்கள் பொருத்தப்பட்டுள்ளன, இவை மடப்பள்ளியில் இருந்து விற்பனையகத்துக்கு லட்டுக்களை கொண்டு செல்ல பயன்படுகின்றன.

மூன்று கன்வேயர் பெல்ட்களில் முதல் பெல்ட் லட்டுகளை எடுத்துச்செல்ல வசதியாக 2007 ஆண்டு நிறுவப்பட்டது. இரண்டாவது பெல்ட் லட்டு, பூந்தி ஆகியவற்றை கொண்டுசெல்ல வசதியாக 2010 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

மூன்றாவது கன்வேயர் பெல்ட் முதலிரண்டு கன்வேயர் பெல்டுகளுக்கு உதவியாக 2014 ஆண்டு பொருத்தப்பட்டது.கடந்த காலத்தில் லட்டுகள் தயாரிக்க விறகு அடுப்பு பயன்படுத்தப்பட்டது, 1984 முதல் சமைக்க எரிவளி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏறக்குறைய 1.5 லட்சம் லட்டுக்களை நாளொன்றுக்கு தயாரிக்கிறது. தற்போது, பொட்டுவில் உள்ள வசதிகளைக் கொண்டுள்ளது நாள் ஒன்றுக்கு 800,000 லட்டுக்களை செய்யும் திறன் கொண்டதாக உள்ளது.

திட்டம் என்பது திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் அதன் விகிதாச்சாரத்தின் பட்டியல் ஆகும்.

திருப்பதி லட்டுக்கு அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்ய, அதன் வரலாற்றில் ஆறு முறை திட்டம் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

தற்போது திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள் கடலை மாவு, முந்திரி, ஏலக்காய், நெய், சர்க்கரை, கற்கண்டு மற்றும் உலர்ந்த திராட்சை.நாள் ஒன்றுக்கு கடலை மாவு சுமார் 10 டன், சர்க்கரை 10 டன், முந்திரி 700 கிலோ, ஏலக்காய் 150 கிலோ, நெய் 300 முதல் 500 லிட்டர், கற்கண்டு 500 கிலோ, காய்ந்த திராட்சை 540 கிலோ மூலப்பொருட்களாக லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. திருப்பதி தேவஸ்தானத்தால் இந்த பொருட்களை கொள்முதல் செய்ய ஆண்டு அடிப்படையில் கேள்விப் பத்திரம் கோரப்படுகிறது.

ஏறக்குறைய 200 சமையல் பணியாளர்கள் லட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த சமையல் பணியாளர்கள் பொட்டு கார்மீகலு என அழைக்கப்படுகின்றனர்.

திருப்பதி லட்டு வகைகள்

ஆஸ்தான லட்டு

இந்த ஆஸ்தான லட்டு முதன்மையான விழா நாட்களில் மட்டும் தயாரிக்கப்பட்டு பிரமுகர்களுக்கு வழங்கப்படுகிறது. இது 750 கிராம் எடையுடனும், பிற லட்டுக்களைவிட மிகுதியான அளவில் முந்திரி, பாதாம், குங்குமப்பூ போன்றவை சேர்த்து தயாரிக்கப்படுகிறது.

கல்யாண உற்சவ லட்டு

இந்த லட்டுக்கள் கல்யாண உற்சவ சேவையில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது 750 கிராம் எடையுடன் இருக்கும். இந்த லட்டுக்கான தேவை மிகுதியாக உள்ளது. புரோகிதம் லட்டைவிட குறைந்த அளவே இது தயாரிக்கப்படுகிறது.

புரோக்தம் லட்டு

இந்த லட்டு பொதுவான பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது மூன்றுவகை லட்டுகளில் இந்த லட்டுதான் அளவில் சிறியது. இது 175 கிராம் எடையுடையதாக இருக்கும். இந்த லட்டுகள் மிகுதியான எண்ணிக்கையில் தயாரிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment